Saturday, October 14, 2006

மேலும் இராணுவ உடல்கள் கண்டுபிடிப்பு

யாழ். முகமாலை முன்னரங்க நிலைகளில் உருக்குலைந்த நிலையில் இருந்த சிறிலங்கா இராணுவத்தினரின் 43 உடல்கள் முழு இராணுவ மரியாதையுடன் எரிக்கும்படி கூறியிருப்பதாக தமிழீழ விடுதலைப் புலிகளின் இராணுவப் பேச்சாளர் இ. இளந்திரையன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் பி.பி.சி. தமிழோசைக்கு இன்று வெள்ளிக்கிழமை இளந்திரையன் அளித்த நேர்காணலில் கூறியதாவது:

சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்திடம் நேற்று வியாழக்கிழமை சிறிலங்கா இராணுவத்தினரின் 74 உடல்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

முன்னரங்க நிலையில் சற்று நல்ல நிலையில் இருந்த மேலும் 4 உடல்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. அவையும் ஒப்படைக்கப்பட உள்ளன. இன்று வெள்ளிக்கிழமை மற்றொரு இராணுவத்தினரின் உடலை ஒப்படைத்துள்ளோம்.

முன்னரங்க நிலைகளில் உருக்குலைந்த நிலைகளில் உள்ள இராணுவத்தினரின் உடலங்களிலிருந்து சொந்த விவரங்கள் மற்றும் அடையாளங்களை எடுக்க முடியுமாயின் அவர்களின் உறவினர்களுக்குத் தகவல் தெரிவிப்பதற்காக எடுத்து வைத்து விட்டு மற்றவற்றை முழு இராணுவ மரியாதையுடன் எரிக்கும்படி கூறியிருக்கிறோம் என்றார் இளந்திரையன்.

முன்னைய செய்தி: இராணுவத்தினரிடம் 74 சடலங்கள் ஒப்படைப்பு (படங்களுடன்)

நன்றி: புதினம்

0 பின்னூட்டங்கள்: