Thursday, October 12, 2006

43பேர் பலி, 30பேரைக் காணவில்லை-ராணுவம் கூறுகிறது

யாழ். முகமாலை சமரில் 43 சிறிலங்கா இராணுவத்தினர் பலியாகி உள்ளனர்- 25 முதல் 30 வரையிலான இராணுவத்தினரைக் காணவில்லை- 224 பேர் படுகாயமடைந்துள்ளனர் என்று சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் பிரசாத் சமரசிங்க தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ரொய்ட்டர்ஸ் நிறுவனம் இன்று வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்தி:

வடபகுதியில் நேற்று நடந்த மோதலில் 43 இராணுவத்தினர் கொல்லப்பட்டுள்ளதாகவும் 25 முதல் 30 வரையிலானோர் காணவில்லை என்றும் 224 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் சிறிலங்கா இராணுவம் தெரிவித்துள்ளது.

"எங்களது முன்னரங்க நிலை மற்றும் புலிகளின் முன்னரங்க நிலைகளுக்கு இடையே சூனியப் பிரதேசத்தில் மோதல் நடந்தது" என்றார் சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் பிரசாத் சமரசிங்க. "எங்கள் தரப்பில் சிலர்- 25 முதல் 30 வரையிலான இராணுவத்தினர் காணவில்லை. அவர்களின் உடல்களை புலிகள் வைத்திருக்க வேண்டும். இன்று வியாழக்கிழமை மாலையில் இருதரப்பு எறிகணைத் தாக்குதல் நடைபெற்றது" என்றார் அவர் என ரொய்ட்டர் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறிலங்கா இராணுவத்தின் வலிந்த தாக்குதல் நடவடிக்கையில் 200 இராணுவத்தினர் கொல்லப்பட்ட நிலையில் 75 பேரின் உடல்களை தமிழீழ விடுதலைப் புலிகள் கைப்பற்றியுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

ஆனால் சிறிலங்கா இராணுவம் 22 பேர் கொல்லப்பட்டதாகவும் 113 பேர் காயமடைந்ததாகவும் நேற்று புதன்கிழமை தெரிவித்திருந்த நிலையில் இன்று இத்தகைய இழப்பை ஒப்புக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Latest News: இராணுவத்தினரிடம் 74 சடலங்கள் ஒப்படைப்பு (படங்களுடன்)

நன்றி: புதினம்

0 பின்னூட்டங்கள்: