Friday, October 13, 2006

இராணுவத்தினரிடம் 74 சடலங்கள் ஒப்படைப்பு

தமிழீழ விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்ட 74 சடலங்களை சிறிலங்கா இராணுவத்தினரிடம் ஒப்படைத்துள்ளதாக சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

யாழ். குடாநாட்டு முன்னரங்க நிலைகளில் சிறிலங்கா இராணுவத்தினருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையேயான மோதலைத் தொடர்ந்து 74 இராணுவத்தினர் சடலங்களை ஒப்படைப்பதற்காக கிளிநொச்சியின் பிரதிக்குழுவினரை விடுதலைப் புலிகள் அழைத்திருந்தனர்.

உடனடியாக இது தொடர்பில் வவுனியாவில் உள்ள பிரதிக்குழுவினர் சிறிலங்கா இராணுவத்தினரை தொடர்பு கொண்டு விடுதலைப் புலிகள் வேண்டுகோளைத் தெரிவித்தனர். மனிதாபிமான அடிப்படையில் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தினர் உடல்களை ஒப்படைப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து 4 ட்றக்குகளில் உடல்கள் கொண்டு செல்லப்பட்டு ஏ-9 பாதையில் உள்ள ஓமந்தை சோதனைச் சாவடியில் உள்ளுர் நேரப்படி இரவு 8 மணிக்கு இராணுவத்தினரிடம் உடல்களை ஒப்படைத்தோம்.

முன்னதாக விடுதலைப் புலிகளால் கைது செய்யப்பட்டு கிளிநொச்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும் சிறிலங்கா இராணுவத்தைச் சேர்ந்தவரையும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தினர் சென்று பார்வையிட்டனர் என்று அச்செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே 74 உடல்களை பெற்றுக் கொண்டதாகவும் மேலும் 4 பேர் காணவில்லை என்றும் சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் பிரசாத் சமரசிங்க தெரிவித்துள்ளார்.

படங்கள் கோரமானவை எச்சரிக்கை!!

நன்றி: புதினம்

2 பின்னூட்டங்கள்:

said...

படங்களோடு வெளியிட்டால் நன்றாக இருக்கும்...

said...

நன்றி இரவி,
கோரமான அந்தப் படங்களுக்கு ஈழபாரதியின் பதிவுக்கு இணைப்புத் தந்துள்ளேன். - விண்ணாணம்