Wednesday, September 06, 2006

கேதீஸ் லோகநாதன் படுகொலையில் மஹிந்த?

கேதீஸ் லோகநாதன் படுகொலையில் மகிந்த ராஜபக்ச?

சிறிலங்கா சமாதான செயலகத்தின் பிரதிப் பணிப்பாளர் கேதீஸ் லோகநாதன் படுகொலையில் சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சவுக்கு தொடர்பிருப்பதாக ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
Global Electro-Newsnet என்ற ஊடகத்தில் இச்செய்தி வெளியானதாக தமிழ்கனேடியன் இணையதளம் பிரசுரித்துள்ளது.

அச்செய்தி விவரம்:

கேதீஸ்வரன் படுகொலை செய்யப்படுவதற்கு முன்பாக மகிந்தவின் உள்வட்டாரங்களான பசில் ராஜபக்ச மற்றும் கோத்தபாய ராஜபக்ச ஆகியோருடன் தொலைபேசியில் உரையாடியுள்ளார்.

மூதூரில் 17 அரச சார்பற்ற பணியாளர்களை சிறிலங்கா இஆணுவத்தினர் படுகொலை செய்தமை குறித்த தனது விசனத்தை இந்த உரையாடலில் கேதீஸ் லோகநாதன் வெளிப்படுத்தினார். அமைதி முயற்சிகளில் சிறிலங்கா அரசாங்கம் ஈடுபாட்டுடன் செயற்படும் என்ற நம்பிக்கை தனக்கு இல்லை என்றும் சாடியுள்ளார்.
இது தொடர்பில் இருதரப்பினரிடையே கடுமையான வாக்குவாதம் நடந்துள்ளது.

மேலும் மூதூர் படுகொலையை ஏற்கமுடியாத தான் அதற்குக் கண்டனம் தெரிவித்து சிறிலங்கா சமாதான செயலகப் பணிப்பாளர் பொறுப்பிலிருந்து விலகுவதாக பகிரங்கமாக அறிவிக்க உள்ளேன் என்றும் கேதீஸ் தெரிவித்துள்ளார்.

இந்த முடிவு குறித்து இரு நாட்கள் தாமதிக்க வேண்டும் என்று மகிந்த ராஜபக்சவும் கேதீஸ்வரனிடம் வேண்டுகோள் விடுத்தார்.

இந்த உரையாடல் முடிவடைந்த நேரத்தில் சிறிலங்கா இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் கேதீஸ்வரனின் வீட்டுக்குச் சென்றுள்ளனர். அதன் பின்னர் சில நிமிடங்களில் கேதீஸ்வரன் படுகொலை செய்யப்பட்டமை தெரியவந்தது.

மூதூர் படுகொலை தொடர்பான சர்வதேச சமூகத்தின் அதிருப்தியை திசை திருப்புவதற்காகவும் கேதீஸ் லோகநாதனை படுகொலை செய்து விடுதலைப் புலிகளுக்கு அவப்பெயரை ஏற்படுத்தவுமே இப்படுகொலைச் சம்பவத்தின் நோக்கமாக இருந்துள்ளது.

கேதீஸ் லோகநாதனை படுகொலை செய்த நபர்களில் எவருமே தமிழர் இல்லை என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

ஜே.வி.பி.யின் கொலைப் பட்டியலில் கேதீஸ் லோகநாதனும் இடம்பெற்றிருந்ததாக சுயாதீனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் ஜே.வி.பி.யினர் இது தொடர்பில் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டனர் என்று அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி: புதினம்

1 பின்னூட்டங்கள்:

said...

இதை மாற்றுக்கருத்தாளர் சிந்திப்பார்களா? அவர்களுக்கும் உதுதான் நிலை.