கொழும்பில் குண்டுவெடிப்பு: 7 பேர் பலி
கொழும்பு கொள்ளுப்பிட்டியில் பாகிஸ்தான் இராஜதந்திரிகள் சென்ற வாகனத்தொடரணியின் வாகனம் குண்டுத்தாக்குதலுக்கு இலக்கானது. இதில் 7 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
கொள்ளுப்பிட்டி லிபேட்டி வட்டத்தில் இன்று திங்கட்கிழமை பிற்பகல் 1.50 மணிக்கு இக் குண்டுத்தாக்குதல் நடந்துள்ளது.
சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சவை பாகிஸ்தான் இராசதந்திரிகள் 4பேர் சந்தித்துவிட்டு திரும்பிய போது அவர்களின் வாகனத் தொடரணியின் பாதுகாப்புப் பிரிவினர் மீது இக் குண்டுத் தாக்குதல் நடந்துள்ளது.
இதில் சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையைச் சேர்ந்த 3 பேரும் இராணுவத் தொலைத் தொடர்பாளர் ஒருவரும் கொல்லப்பட்டனர். மேலும் மூவரும் கொல்லப்பட்டுள்ளனர் என்று கொழும்புச்செய்திகள் தெரிவிக்கின்றன.
நன்றி: புதினம்
0 பின்னூட்டங்கள்:
Post a Comment