Monday, May 15, 2006

எதை நாம் பேச?

...ஆளும் வர்க்கச் சிங்கள மொழியில்
போர் என்றாலும் போர்.
சமாதானம் என்றாலும் போர்.
எதை நாம் பேச?

...ஆளப்படுகிற சிங்கள மக்களோ
வாய்மொழி இழந்து
முகங்கள் இழந்து
அபினி தின்று மூச்சுமிழந்து
ஆளும் பேய்களின் நடைப் பாவையாக,
இந்த மனிதன் விழிக்கும் வரைக்கும்
எவருடன் பேச?

சுமார் 30 வருடங்களுக்கு முன் யாராலோ எழுதப்பட்டது. இன்றும் அதே நிலை.